.
கார் போர்டிக்கொவில் நிற்க, அங்கே என் அம்மா!(?) எங்களை(?) எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தாள், நல்ல வேலையாக தாத்தாவின் பக்கம் இருந்ததது வீடு. அவர் காரை விட்டு இறங்க, அம்மா அவர் கைபற்றி ஏதோ சிரித்து பேச, ஒரு ரெண்டு நிமிஷம் கழிச்சு தாத்தா பின்னால் திரும்பி ஏதோ தேடினார், தேடியது கிடைக்காமல் என்னைப் பார்த்து ஏதோ கையசாய்த்துக் கூற, எனக்கு ஒன்றும் கேட்க்கவில்லை. நடப்பதெல்லாம் ஏதோ பிரம்மைப் போல் நான் உணர, யாரோ என் தோள்களில் கைவைத்து உலுக்க, மூளையும், உடலும் செயல்பட மறுக்க, கண்கள் இருட்ட, அப்படியே சீட்டில் சரிந்தேன் நான்.
ஏதோ சத்தம் வெகு தொலைவில், என் கன்னத்தை யாரோ தட்டுகிறார், கண்களை திறக்க வெறும் வெளிச்சம் மட்டுமே, மனதில் பெரும் பயம், கண்களை மீண்டும் இருக்க முடிக்கொண்டேன், தொலைவில் கேட்ட சத்தம்,,, இப்பொழுது அருகில் வர வார்த்தைகள் ஆயின,
"மணி, ஒண்ணும் இல்ல,, கண்ண திற, ஒண்ணும் இல்ல"
என்கிற வார்த்தைகள் கொடுத்த தைரியத்தில், மீண்டும் கன்னதிறக்க மங்கலாக ஏதோ ஒரு முகம், கன்னங்களில் யாரோ தட்ட, மங்கலான முகம் தெளிவாக தெரிகின்றது. பேரழகு முகம், பின்னிய கூந்தலில் இருந்து பிரிந்த மயிர் கற்றுக்கள் முகத்தின் இருபக்கமும் தொங்க, செதுக்கிய புருவம், அழகிய பெரிய கண்கள், அந்த கண்களில் ஏதோ ஒரு ஏக்கம், குற்றஉணர்ச்சி, நல்ல கூர் மூக்கு, செழுமையான பூ போன்ற சிவந்த கன்னம், அழகிய ஈரம் நிரந்த உதடுகள், நல்ல வடிவான முகம். நான் இறந்து விட்டேனோ?, சொர்க்கத்தில் இருக்கிறேனோ?, என்ன எழுப்ப முயற்சிப்பது சொர்க்கத்து தேவதையோ? யென எண்ணற்ற கேள்விகள்.
இல்லையே!,, இந்த முகம் இதற்க்கு பார்த்த முகம்தானே!,, என்று என் மனம் குழப்ப, கண்கள் சுருக்கி உற்று நோக்க, அந்த அழகிய கண்களில் மின்னல் போன்ற ஒரு மகிழ்ச்சி, கண்களில் தோன்றிய மகிழ்ச்சி முகமெங்கும் பரவா, கழுத்தை பார்த்தால் ஸ்டேத்ஸ்கோப், மறுபடியும் யாரோ என் கன்னத்தில் தட்ட
"ஒண்ணும் இல்லடா கண்ணா, கண்ண திற, அப்படித்தான் குட் பாய்"என்கிற சத்ததில்,
அந்த அழகிய முகம் யாருடையது என்பது என் மூளைக்கு உரைக்க,,, ச்சீ,,, இது என் அம்மா, சுமாவின்(இனிமேல் சுமா என்றே அழைக்கப் பாடுவாள், என் அம்மாவாக இல்லை) முகம் எனும் எண்ணம்,,,, என் பிரம்மையில் இருந்து பட்டென விடுபட்டேன். நான் ஒரு சோபாவில் கிடத்தப் பட்டிருக்கிறேன், சுமா ஏதோ கூற,, என் காதில் ஒன்றும் விழவில்லை, என் கண்கள் தாத்தாவைத் தேடின,,, சுற்றி சிலர் பெண்கள் இருக்க தாத்தாவைக் காணும், மறுபடியும் பயம் தொற்றிக் கொள்ள "தாத்தா" என்று நான் குரல் கொடுக்க
"இங்க தாண்டா இருக்கேன் கண்ணா, ஒன்னுமில்ல ராஜா, ஒன்னுமில்ல" என்று தழுதழுத்த சத்தம் வந்த பக்கம் தலையை திருப்ப, தாத்தா என் கைகளைப் பற்றிய படி சோபாவின் பின் பக்கம், கண்களில் கண்ணீருடன் நின்றிருந்தார். என் மனம் சற்று அமைதி அடைந்தது.
"மணி, கொஞ்சம் அப்படியே எழுந்து உக்கார முயற்சி பண்ணு" சொல்லிவாறே சுமா என்னை தோள்களை பற்ற,, சோபாவில் அமர வைக்கப் பட்டேன்.
"இப்போ எப்படி இருக்கு, தலை சுத்தல், வாமிட் வர்ற மாதிரி ஏதாவது பீல் பன்னுரையா?", நான் இல்லை என்று தலை ஆட்ட
"மூச்சுவிட ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே?", அதற்கும் நான் இல்லை என்று தலை ஆட்ட
"கொஞ்சம் ஏந்திரிச்சு நிக்க ட்ரை பன்னு!"னு சுமா சொல்ல, என் சுய உணர்வு திரும்பியதைப் போல் உணர்ந்தேன், எழுந்து நின்று
"நான் ஓகே தாத்தா, ஐ ஆம் ஃபைன்"னு சுமாவுக்கு பதில் சொல்லாமல் தாத்தாவைப் பார்த்து சொல்ல,
"அம்மா கேக்குறதுக்கு பதில் சொல்லு ராஜா"னு அவர் கெஞ்சும் தொனியில் சொல்ல, நான் திரும்பி சுமாவைப் பார்த்து
"ஐ பீல் ஃபைன்"னு சொல்ல, எழுந்து நின்றவள், சிரித்தவரே என் கன்னத்தில் தட்டி
"ஓகே, குட், இப்போ உக்கரு"னு சொல்லிட்டு, தாத்தாவை பார்த்து,
"ஒன்னும் இல்லப்பா, சுகர் லெவல் குறைஞ்சிருக்கும், சரியா சாப்பிடலையா? காலைல இருந்து?"னு தாத்தாவை பார்த்து கேக்க, நான் இடைமறித்து,
"நான் ரூம்க்கு போய் ரெஸ்ட் எடுக்கவா?"னு கேட்டேன், தாத்தா அம்மாவை பார்த்துவிட்டு, சரியென்று தலையாட்ட, எழுந்து மாடிப் படி நோக்கி நடந்தேன்.
"மேல வேணாம், கீழ தாத்தா ரூம்ல படு"னு சுமா சொல்ல, பதில் சொல்ல விரும்பாமல், தாத்தா ரூம்க்கு சென்று கதவை அடைத்தேன், தாத்தா கேவி அழுகின்ற சத்தம் அறைக்குள் மெலிதாக கேட்டது, ஏனோ அழவேண்டாம் என தாத்தாவிடம் போய் சொல்ல மனமில்லை. பெட்டில் விழுந்து,, பட்டேன் தூங்கினேன். தூக்கத்தில் கைகளில் ஏதோ ஊருவது போல் இருக்க விழித்துப் பார்த்தால், அங்கே டாக்டர் சுமா, என் கைகளில் நீடில் குத்தபட்டு டிரிபிஸ் ஏறிக் கொண்டிருந்தது. நெஞ்சில் அவள் தட்டிக் கொடுக்க மறுபடியும் தூங்கிப் போனேன். தம்பி, தம்பி என்று சத்தம் கேட்டு தூக்கம் கலைந்தேன், தாத்தாதான் எழுப்பியது,
"எழுந்துட்டான், இந்த அவன்டா பேசுங்க"னு சொல்லி, கோச் பேசுவதாக கூறி ஃபோன் என்னிடம் கொடுத்தார்.
"நல்ல இருக்கேன் சார்"
"தெரியல சார்,......இப்போ ஓகே, நாளைக்கு மேட்ச் விளையாடிருவேன்"னு சொல்லியவரே பெட்டை விட்டு எழுந்தேன்.
"இல்ல சார், ஐ பீல் பிட்,....ஓகே சார்"
"சார், அப்புறம் பாப்பா, மேடம் ரெண்டு பேரும் நல்ல இருக்கங்களா?",
"ஓகே சார்....பாய்"சொல்லி தாத்தாவிடம் ஃபோனைக் கொடுக்க, வாங்கியவாரே
"கண்ணா, இப்போ எப்புடி இருக்கு"னு தாத்தா கேக்க, நான் சிரித்துக் கொண்டே
"ஏன் நான் நல்லா தானே இருக்கேன்!, இன்னைக்கு ரெண்டு மேட்ச் ஆடிருக்கேன், நாளைக்கு ஒரு மேட்ச் இருக்கு, இங்க பாருங்க நான் எப்புடி குதிக்கிறேன்னு" சொல்லி பெட் மீது ஏறி தாவிக் குதித்தேன்.
"சும்மா,,,,, எனக்கு ஒண்ணும் இல்ல,,,,,, என்னைய இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்ததுக்கு பனிஷ்மெண்ட்,,,,, நல்ல பயந்தீங்களா?"னு சொல்லி அவர் அருகில் சென்றேன், முகம் முழுக்க வருத்தத்தோடு சிரித்தவர், என் தலைமுடிகளைக் கோதி
"வா, வெளிய போய் கொஞ்ச நேரம் நடக்கலாம்"என்று என்னை வீட்டின் வெளிய இருக்கும் கார்டனுக்கு அழைத்து சென்றார். வெளியே கொஞ்சநேரம் நாங்கள் உலாத்திக் கொண்டிருந்தோம்,
"இங்க இருக்கீங்களா!,, ரெண்டு பேரும்" என்ற சத்தம் வந்த திசையை நோக்கினோம் இருவரும், எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள் சுமா,
"வா,,, மா,,, சும்மா அப்படியே வெளிக் காத்து வாங்கலாம்னு வந்தோம்"னு தாத்தா சொல்ல, என் அருகில் வந்தவள்
"இப்போ எப்புடிடா இருக்கு?,,,, ஆர் யு ஃபீலிங்க் குட்?"னு கேக்க, நான் அவள் முகம் பார்ப்பதை தவிர்க்க, கையில் டிரிப்ஸ் ஏற்றிய இடத்தில் இருந்த பளஸ்டரியை பிய்த்துக் கொண்டே
"ஐ பீல் நார்மல், ஒன்னும் இல்ல, இப்போ கூட விட்டா ஒரு ஜாக்கிங்க போவேன், இல்ல தாத்தா" என்று தாத்தாவை பார்த்து கூறினேன். தாத்தா வாஞ்சையாக என்னைப் பார்த்து சிரித்தார்.
"நாளைக்கு கண்டிப்பா மேட்ச் ஆடுறேன்னு சொல்றன் மா!"னு தாத்தா அவளைப் பார்த்து சொல்ல, நான் குறுக்கிட்டு
"தாத்தா, இங்க பாருங்க நான் நல்லத்தான் இருக்கேன், ஏதோ தெரியமா மயங்கிட்டென்"னு சொல்ல, சுமா எனக்கு ஆதரவாக பேசினால்
"மேட்ச் ஆடட்டும், ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல, சரியா சாப்பிடமா, மேட்ச் பிரஷர்னு,, அது இதுணு,, சுகர் டிராப்,,, அவ்வளவதான், நீங்க பயப்படுற அளவுக்கு ஒன்னும் இல்ல"னு சொல்ல
என்ன மாதிரியான அம்மா இவள், மயங்கி விழுந்த பிள்ளையை மறுநாள் மேட்ச் ஆட சொல்றா, ச்சீ இவளுக்கு என் மேல அவ்வளவு வெறுப்பா, ஒரு வேல நான் செத்த கூட சந்தோசத்தான் படுவா போல, கண்டிப்பா வறுத்த படமாட்டானு,,, பல எண்ணங்கள் என் மனதில் ஓட
"மணி பத்தாக போகுது, வாங்கப்பா சாப்பிடலாம்"என்ற அவளின் பேச்சு என் எண்ண அலைகளை கலைத்தது
.
வீட்டினுள் சென்று சாப்பிட்டு முடிக்க, அப்பாவிடம் இருந்து ஃபோன், என்னிடம் குசலம் விசாரிக்க ஏனோ தானோனு நானும் பதில் பேசி வைத்து விட்டு, தூங்கா என் அறைக்கு செல்ல, தாத்தா தன் அறையில் இன்று தூங்கச் சொன்னார்.
மேட்ச் காலையில் எட்டு மணிக்கு என்றும், தான் சிறிது நேரம் கழித்து வருவதாகவும், காத்திருக்காமல் என்னைத் தூங்காச் சொன்னார். காலையில் அலாரம் எழுப்பிவிட எழுந்து காலை கடன்களை முடித்து விட்டு, குளித்து ரூம்க்கு வந்ததால் தாத்தா இன்னும் தூங்கி கொண்டிருந்தார். எழுப்பி விட, கழிவறை சென்றவர் ஐந்து நிமிடங்களில் திரும்பி வந்தார். வந்தவர் ஃபோன்ல் தனக்கு சோர்வாக இருப்பதாகவும், சுமாவை ரூம்க்கு வரும் படி அழைத்தார், நான் என்னாச்சுனு கேக்க, தனக்கு ஒன்றும் இல்லை என்றும், என்னை கிளம்பி ரெடியாகச் சொன்னார்.
நான் என் அறைக்கு சென்று ரெடி ஆகி கீழே வந்தால், தாத்தா இன்னும் பெட்டில் இருந்தார், பக்கத்தில் சுமா. நான் கிளம்புவதை பற்றி கேக்க, தாத்தாக்கு கொஞ்சம் பிரஷர் அதிகமாக இருப்பதாகவும், அவளே என்னை மேட்ச் ஆட கூட்டிப் போவதாகவும், தான் கிளம்பி வரும் வரை காத்திருக்க சொல்லிவிட்டு,,, வெளியே சென்றாள் சுமா. அவள் வெளியே சென்றவுடன்,
"தாத்தா நான் தனியா போய்ட்டு வந்துருவேன், அம்மா வர வேண்டாம், எனக்கும் கார் மட்டும் போதும்" என்று கெஞ்ச
கண்டிப்புடன் மறுத்தவர், ஏதேதோ சொல்லி என்னை சுமாவுடன் செல்ல சம்மதிக்க வைத்தார்.
அரைமணி நேரத்தில் வந்தவள், என்னை அழைத்தால், நான் தாத்தாவைப் பார்க்க, போ என்று செய்கை செய்தவர், சுமாவைப் பார்த்து
"பாத்துமா, பத்திரமா பாத்துக்கோ, கூடவே இரு, மேட்ச் முடிஞ்சதும் ஃபோன் பண்ணு"னு அடுக்க
"அப்பா, இவன் என் பையன் சரியா!,,,, நீங்க கவலைப் படமா ரெஸ்ட் எடுங்க,,, மேட்ச் முடிஞ்சதும் கூட்டிடு வந்து உங்ககிட்ட பத்திரமா ஒப்படைச்சிறுவேன்,,,,, ஓகே" னு சொல்லி என்னை பின் தொடர்ந்தாள். நான் கார் கராஜ் அருகில் செல்ல, ஒரு சிவப்பு கலர் A-Class பென்ஸ் கார் திறக்கப் படும் சத்தம் கேட்டக, நான் பின் கதவை திறந்து ஏறி அமர்ந்தேன். டிரைவர் சீட்டில் ஏறி அமர்ந்தவள், சீட் பெல்டை போட்டவரே, என்னிடம்
"முன்னாடி வந்து உக்காரு"னு சொன்னாள்
"பரவா இல்ல, ஐ ஆம் ஓகே"
"நான் ஒண்ணும் உனக்கு டிரைவர் இல்ல, முன்னாடி வந்து உக்கார போறியா? இல்லையா?"னு கொஞ்சம் சத்தம் உயர்த்தி கேக்க,
வேறு வழியல்லாமல், இவளுக்கு அப்படி என் மேல் என்னதான் கோவம், ஒரு சின்ன பையன்னு கூட பாக்கம, இப்படி காலையிலேயே மூஞ்சில அடிச்ச மாதிரி பேசுரா, எல்லாத்துக்கும் இந்த தாத்தாதான் காரணம் என்று தாத்தாவைத் திட்டிக் கொண்டு முன்னால் ஏறி அமர்ந்தேன். காரை ஸ்டார்ட் செய்தவள், மறுபடியும்
"சீட் பெல்ட் போடு, ஒன்னு ஒன்ன உனக்கு சொல்லனுமா?"னு அவள் கத்த,
எனக்கு கண்ணீர் பொங்கியது, தலையை குனிந்து கண்ணீரை அடக்கிக் கொண்டு சீட் பெல்ட்டைப் போட்டு விட்டு, மொபைல் எடுத்து நோண்டினேன்
நல்ல வேலையாக எதுவும் பேசாமல் வண்டியை ஓட்டினாள், பதினைந்து நிமிடத்தில் போட்டி நடக்கும் கிளப்பை அடைந்தோம், வண்டி நின்ற அடுத்த நொடி காரை விட்டு இறங்கினேன். பின்னால் இருந்த கிட் பேக்கை எடுத்து தோளில் மாட்டிய பின்தான் நார்மலாக சுவாசமே வந்தது, அவளை சட்டை செய்யாமல் நான் கிளப் ஆபீஸ் நோக்கி நடந்தேன், எனக்கான போட்டியின் கோர்ட் நம்பர் கேட்டுக் கொண்டு திரும்ப, இடுப்பில் கைவைத்து முறைத்துக் கொண்டிருந்தாள் சுமா,"கொஞ்ச நேரம் பொறுக்க மாட்டியா?,,, சொல்லாம கொல்லாம இப்படி வந்த என்ன அர்த்தம்?,,, ம்?" அவள் பொறிந்தது தள்ள,
"மேட்ச் கோர்ட் நம்பர் செக் பண்ண வந்தேன்!"னு
தலை குனித்தவாரே சொன்னேன், அப்போது யாரோ "ஹாய் சுமா" என்று அழைக்க, இவளும் "ஓ ஹாய், நிரோ"னு பதில் கொடுக்க, நான் நிமிர்ந்தது அவர்களைப் பார்த்தேன், அங்கே "நிரோ" என்று இவள் அழைத்த பெண்ணும், பக்கத்தில் ஒரு பதினாறு, பதினேழு வயது மதிக்க தக்க பையனும் இவளை நோக்கி வந்தார்கள். அந்த பெண்மணியின் உடன் வந்த பையன்
"ஹாய் ஆண்ட்டி"னு கை அசைக்க, இவளும் அவன் தலைமுடி கலைத்து
"என்னடா நாளுக்கு நாள் அழகாகிக் கிட்டே போற?"னு கொஞ்ச, அவன்
"போங்க ஆண்ட்டி, எப்போப் பாத்தாலும் என்னை ஓட்டுரதிலேயே இருங்க"னு குழைய,
இதை சகிக்க முடியாத நான், இவள் மறுபடியும் திட்டினாலும் பரவா இல்ல என்று நினைத்துக் கொண்டு என் மேட்ச் கோர்ட்டை நோக்கி நடந்தேன். கோர்ட்டை அடைந்த நான் கிட் பேக்கை திறந்து ரெடியாக,,,,, "ஹாய்" என்று ஒரு குரல், தேன்குரல், நான் நிமிர்ந்து பாக்க, கேலரியில் ஒரு ஆறேழு வரிசைக்கு மேல், அழகே உருவமாக ஒரு பெண், என்னைப் பார்த்து கை அசைத்தால், பக்கத்தில் நான்கு பெண்கள் இரு பையன்கள், நான் திரும்ப கை அசைக்க, என்னை நோக்கி இறங்கி வந்தாள். என்னைவிட மூன்று அல்லது நான்கு வயது அதிகம் இருக்கலாம், ஒயிட் ப்லோரல் லாங் ஸ்கர்ட், மேரூன் கலர் ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் அணிந்திருந்தாள், அருகில் வந்தவள்
"ஆர் யு தே ஒன் கோயிங் டு கம்பிட் வித் தருண்?"னு கேக்க, நான் பதில் கூறாமல் அவளைப் பார்த்து மலங்க மலங்க முழிக்க, என தொளைப் பற்றி அசைத்தாள், சுயநினைவு வந்தவனாக
"சாரி, என்ன கேட்டீங்க?"னு கேக்க
"நீ தான் தருண் கூட மோதப் போறியா?"னு கேக்க, நான் தெரியவில்லை என்று உதடு பிதுக்க
"உன் பேரு மணிகண்டன்னா? உன் மேட்ச் கோர்ட் இதுவா?"னு அவள் கேக்க, என் பேரு எப்படி இவளுக்குத் தெரியும் என்று யோசித்தவரு, அவளின் கேள்விக்கு
"எஸ், நான் தான் மணிகண்டன், ஐ ஹாவ் எ மேட்ச் இன் திஸ் கோர்ட் அட் எய்ட், வொய்?"னு சொல்ல,
"சொ ஸ்வீட்,,, பேட் லக் தம்பி,,,,, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்"னு சொல்லி என் முன்னந்தலை முடி கலைத்து விட்டு, திரும்பி சென்று தன் கூட்டத்துடன் அமர்ந்து கொண்டாள், இவள் சென்று அமர்ந்ததும் "கொள்" என்று ஒரு சிரிப்பு அக்கூட்டத்தில், கடுப்பில் கோர்ட்டை விட்டு வெளியே வந்தேன், அவள் என்னை தம்பி என்று சொன்னதை விட, என்னை ஒரு சிறுவனைப் போல் பார்த்ததுதான்(?),,, என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
உள்ளே செல்ல மானமில்லாம் அங்கேயே உலத்திக் கொண்டிருந்தேன், கையில் இருந்த ராக்கெட்டை சூழற்றிக் கொண்டே, சிறிது நேரத்தில் என் பெயர் சொல்லி அழைப்பு வர, உள்ளே சென்றேன். அங்கே நின்றிருந்த என் போட்டியாளன் வேறு யாருமமில்லை,,, சுமா கொஞ்சி அந்த பையன்,,,,தருண். நான் கோர்ட்டை சுற்றி ஒரு பார்வை பார்க்க, கேலரியில் முதல் வரிசையில், அந்த "நிரோஷா"க்கு (பின்னால் தெரிந்து கொண்டேன் "நிரோஷா" தான் "நிரோ" என்று) பக்கத்தில் அமர்ந்து கொண்டு,,, என்னை முறைத்தவாறு இருந்தாள் சுமா.
எப்போது உண்டான ஃபார்மாலிட்டீஸ் முடிந்து, டாஸ் போட அவன் பக்கம் விழுந்தது, பரஸ்பர கைக்குழுக்களுக்கு பின், நான் என் பக்கம் போக " கமான் தருண், கமான்" யென்று ஒரு சத்தம், எனக்கு நன்றாக தெரியும் அது அந்த ஒயிட் ஸ்கர்ட் தேவதையின் சத்தம் என்று. அவளப் பார்க்க விரும்பவில்லை, ஆனால் தருணின் மீது கொலை வெறியில் இருந்தேன், இருக்காதா பின்னே?,,, என்னை பாசமாக ஒரு பார்வை கூட பக்காத என் அம்மா இவனை கொஞ்சுகிறாள்!,,,, இந்த ஒயிட் ஸ்கர்ட் தேவதை,, இவனை தலையில் தூக்கி வைத்து ஆடுகிறாள்!, நிமிர்ந்தது தருணைப் பார்த்தேன், சர்வீஸ் போட ரெடியாக இருந்தான், ரேபிரீ அவனிடம் ரெடி?னு கேக்க அவன் "எஸ்!” என்றான், என்னிட திரும்பிய ரேபிரீ ரெடி?னு கேக்க, ராக்கெட்டால் ஷூவை தட்டிவிட்டு "எஸ்!" என்றேன்
நான் ராக்கெட்டால் ஷூவை தட்டியதில் இருந்து இருபது நிமிடம் கழித்து!
நான் வாயெல்லாம் பல்லாக, ஒயிட் ஸ்கர்ட்டைப் பார்த்து சிரித்தபடி,,, தருணின் கையை குழுக்கிக் கொண்டிருந்தேன், அழகாக வாயை குனட்டியவள்,,, வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள், முறுபடியும் பரஸ்பர கைக்குழுக்களுக்கு பின், நான் என் கிட் பேக்கில் என்னுடைய உடைமைகளை வைத்துக் கொண்டிருக்க
"வெல் பிளேய்டு எங் மேன்" சத்தம் கேட்டு திரும்பிப் பார்க்க, அங்கே நேற்று இதே வார்த்தைகளை கூறியவருடன் இன்னொருவர் நின்றிருந்தார். நான் எழுந்து நிக்க, கை குடுத்தார்கள், நான் நன்றி சொல்லி விட்டு, சுமாவை தேட, அவள் என்னிடம் தோற்ற தருணுக்கு ஆறுதல் சொல்லும் கூட்டத்தில் இருந்தாள், எனக்கு சிரிப்பு வந்தது
"உன் ரிஜிஸ்டிரேசன் ஃபார்ம்ல பாத்தேன், உனக்கு 13 வயசுதானே?"னு புதிதாக வந்தவர் கேட்க்க, ஆமா என்று தலையசைத்தேன்
"எதுக்கு உன் கேட்டகிரில ஆடாம, அன்டர்-16ல கம்பிட் பண்ணின?"னு அவர் கேக்க
"என் கோச்-தான், முடிவு பண்ணினார்"னு நான் சொல்ல
"உன் கோச் எங்க"னு திரும்ப அவர் கேக்க, நான் நடந்ததைச் சொல்ல, அவர்
"இஸ் தேர் சம்படி வித் யு"னு கேக்க நான் தயங்கி நின்றேன், அவர் மறுபடியும்
"உன் கூட யாராவது வந்துருக்காங்களா"னு கேட்டார், நான் இல்லை என்று தலையசைக்க, என் தோள்களில் ஒரு கை விழுந்தது,
"எஸ், ஐ ஆம் ஹிஸ் மாம்! ஏதாவது ப்ராப்ளம்மா?"னு பின்னால் இருந்து ஒரு சத்தம், சுமாவினுடையது
"நோ ப்ராப்ளம் சுமா மேடம்!, தம்பீ, உங்க பையனு தெரியாது மேடம், கவுதம் தான் நேத்து சொன்னார், ஒரு சின்ன பையன் அன்டர்-16ல கம்பிட் பண்றான், நல்ல பொடன்ஷியல் இருக்குனு, இன்னைக்கு இவன் விளையாடுரத பாத்தோம், ஹி ரியல்லி காட்ட பொடன்ஷியல் டூ மேக் இட் பிக்"னு சொல்ல, சுமா அவர்களிடம் நன்றி சொன்னாள்.
புதிதாக வந்தவர் பெயர் சுந்தர்னும், அவர் இந்த கிளப் டென்னிஸ் அக்கடமி டைரக்டர்னும், சுமா இந்த கிளப்பில் (அது ஒரு ரேகிரியேஷன் கிளப், டென்னிஸ் அக்கடமி அதில் ஒரு பகுதி) மேம்பர்னும் பின்னாடி தெருஞ்சிக்கிட்டேன். இருவரும் சுமாவிடம் என் திறமையை புகழ்ந்ததார்கள், சரியா தயார் பண்ணினால் நான் தொழில்முறை டென்னிஸ் ஆட பிரகசமான வாய்ப்பு இருப்பதாக கூறினார்கள். தங்கள் அக்கடமியில் சேர்க்கும் படி கேட்டுக் கொண்டார்கள்.
சுமாவும் நான் கொடைக்கானலில் படிப்பதை சொல்லி கஷ்டம் என்றும், தான் யோசித்து விட்டு சொல்வதாக சொன்னாள். சிறிது நேரத்தில் தருணும், அவன் அம்மாவும் வந்து நான் சுமாவின் மகன் என்பதை அறிந்து ஆச்சரியம் அடைந்தார்கள். ஒரு அரைமணி நேரம் ஏதேதோ பேசினார்கள், தருணும் அவன் பங்குக்கு எண்ணப் பாராட்டினான். சுமா ஏதோ என் திறமைக்கு மொத்தமும் அவள் தான் காரணம் என்பதைப் போல அவர்களிடம் கர்வமாக,, பெருமைப் பீத்திக கொண்டாள், நான் அந்த ஒயிட் ஸ்கர்ட் தேவதை வரமாட்டாளா என்ற எதிர்பார்ப்பில், சுமாவின் பீத்தலை அவர்களுடன் வேண்டா வெறுப்பாக கேட்டுக் கொண்டிருந்தேன்.
டோர்னமெண்ட் நிர்வாகி ஒருவர் வந்து என்னை அழைத்து, மெயின் டோர்னமெண்ட்க்கு நான் தேர்வானதாகவும், அதற்கான பதிவை இன்றே செய்தது கொள்ளலாம் என்று சொல்லிச் சென்றார். மறுபடியும் தருணும், அவன் அம்மாவும் எனக்கும், சுமாவுக்கும்(?) வாழ்த்து சொல்லி விட்டு கிளம்பினார்கள். நாங்களும் மெயின் டோர்னமெண்ட்க்கு பதிவு செய்து விட்டு, அதற்கான பதிவு தொகை ஐம்பதாயிரம் யென்று சொல்ல, சுமா அதிர்ச்சியுடன்
"இவ்வளவு எதிர்ப் பாக்கல, இது என்ன மாதிரியான டோர்னமெண்ட்?"னு கேக்க
"மேடம் இது தமிழ்நாடு டென்னிஸ் அசோசியேஷனோடா டோர்னமெண்ட், ஸ்டேட் லெவல் ராங்கிங்க் இருக்கு, உங்க பையன் அக்கடமி ரிஜிஸ்டர்ட் மெம்பர் இல்லன்றாலதான், இவ்வளவு கட்டுரிங்க, மெம்பர்-ஆ இருந்தா முப்பது பர்சண்ட் கம்மீ"னு சொல்லுச்சு கவுண்டர்ல இருந்த பொண்ணு
"ஓகே"என்ற சுமா தன் பையை நோண்டினாள்
"பேமண்ட் பண்ண பத்து நாள் டைம் இருக்கு மேடம், பையனோட ரிஜிஸ்டர் நம்பர் வச்சு பத்து நாளுக்குள்ள வந்து பே பன்னிக்கலாம்"னு
"நோ, நோ, இப்பவே கட்டிரலாம், ஜஸ்ட் இவ்வளவு அமெளண்ட் நான் எதிர்ப் பார்க்கலை"னு சொல்லி காரட் கொடுத்தாள். எல்லாம் முடிந்து ஐந்து நிமிடம் கழித்து காரில் சென்று கொண்டிருக்கையில்,,,, வழியில் இருந்த ஐஸ்கிரீம் கடையை நான் பார்க்க அதை சுமா கவனித்து
"ஐஸ்கிரீம் சாப்பிடலாமா?"னு கேக்க,
நான் என்ன சொல்வதென்று தெரியாமல்,, சரி என்று தலையாட்டிட்டேன். காரை யு-டர்ன் போட்டு, ஐஸ்கிரீம் கடை முன்பு நிறுத்தினாள், உள்ள சென்று எனக்கு பிடித்த ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட ஆரம்பித்தேன். சுமா என்னையே பார்ப்பது போல் இருந்தத
ு, நிமிர்ந்து பார்க்க தூண்டிய எண்ணத்தை அடக்கி கொண்டு ஐஸ்கிரீம்மை காலி செய்துக் கொண்டிருந்தேன்.
"எதுக்கு அப்படி சொன்ன?" சுமாவின் திடீர் கேள்வியால், நிமிர்ந்து "எதை பற்றி கேக்ககிறாள்?" என்ற குழப்பத்துடன் அவளைப் பார்க்க, என் குழப்பத்தை அறிந்தது கொண்டவள்
"அதான், யாராவது உன் கூட வந்து இருக்கங்களானு?, மேட்ச் முடிஞ்சதும் கேட்டங்கல்லா, நீ எதுக்கு இல்லனு தலையாட்டுன?,,,ம்ம்?"னு அவள் கேக்க,
"பின்ன என்ன சொல்ல சொல்லுற என்ன?, அம்மா வந்துருக்காங்க, இவங்க தான் என் அம்மானு சொல்லணும் எதிர்ப் பாத்தியா? அப்படி நான் சொல்லணும்னா அம்மான்ற முறைல நீ ஏதாவது செஞ்சிருக்கணும்ல எனக்கு, இது வரைக்கும் என்ன செஞ்சிருக்க? என்ன பெத்தத தவிர்த்து? ஒரு மயிரும் செய்யல? இதுல கேள்வி மாயிறு வேற?"னு கோபத்துல கத்தனும் போல இருந்தது எனக்கு. கோபத்தை கட்டு படுத்த கண்களில் கண்ணீர் தோன்றியது, இதைப் பார்த்த சுமா
"ஓகே......, சும்மா சின்ன புள்ள மாதிரி அழாதே, நான் எதுவும் கேட்கல!"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக